ஹைதராபாத் மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள் :
பிரியாணி அரிசி 2 கப்
மட்டன் கால் கிலோ
பெரிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் 4
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் 5 (நைசாக அரைக்கவும்)
பப்பாளி 1 சிறிய துண்டு(நைசாக அரைக்கவும்)
தயிர் அரை கப்
மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா அரை டேபிள் ஸ்பூன்
பட்டை 2
கிராம்பு 4
ஏலக்காய் 3
புதினா 1கைப்பிடி
பிரிஞ்சி இலை 3
எலுமிச்சம் பழ சாறு 1 டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள் கால் டேபிள் ஸ்பூன்
பால் 2 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ சிறிது
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
முந்திரி 6
எண்ணெய் தேவைக்கேற்ப
நெய் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாவற்றிலும் பாதியை எடுத்து அரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய மட்டன், அரைத்த பொடி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலா, வெங்காய விழுது, பப்பாளி விழுது, பிரியாணி இலை, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிது புதினா, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி 3 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிது எண்ணெய் சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி முக்கால் பதம் வேக வைத்து வடித்து சிறிது உப்பு கலந்து வைக்கவும்.
வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தனியாக வைக்கவும்.
பெரிய பாத்திரத்தில் நெய், எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் ஊற வைத்த மட்டனை அப்படியே கொட்டி வதக்கவும்.
நன்கு வதங்கிய பின் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். மட்டன் நன்கு வேக வேண்டும்.
கொஞ்சம் கிரேவியாக இருக்க வேண்டும். அதில் வேகவைத்த சாதம், வதக்கிய வெங்காயம், மீதி புதினா, எழுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கி மூடி தம்மில் வைக்கவும்.
பிரியாணி வெந்ததும் பாலில் குங்குமப் பூவை கரைத்து தௌpத்து மூடி வைக்கவும்.
முந்திரியை நெய்யில் வறுத்து மேலே தூவி பறிமாற சூப்பர், சுவையான ஹைதராபாத் பிரியாணி ரெடி.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தால் தம் ஆகிவிடும்.
கத்தரிக்காய் கிரேவி, ஆனியன் ரெய்த்தாவுடன் பறிமாற சுவை கூடும்.